Home Contact Us



ஸ்ரீமந் நாராயணரின் ஆதிபலி (வேள்வி)! 



ஆதிமூலம்



கல்கி-மகா-அவதாரம் தாம் யார் என்பதை நிரூபித்தல்



கல்கி-மகா-அவதாரம் ஸ்ரீமந் நாராயணரே!!

1. கல்கி-மகா-அவதாரம்:

ஏகம் சத், விப்ராஹ பஹுதா வதந்தி -- மெய்ப பொருள் ஒன்ற: பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது -- ரிக் வேதம்

ஶ்ரீமந் நாராயணர் (ஆதி மூலம்) அனைத்து உலகஙகளையும் படைத்தார். இந்த பூமியானது கோடிக்கணக்கான வருடங்கள் பழமையானது. பெரிய சாம்ராஜ்யங்களையும், விஞ்ஞான அறிவு மிகுந்த நாகரீகங்களையும் கண்டிக்கின்றது. கிறிஸ்தவர்கள் கூறும் வண்ணம், இந்த உலகம், 6000 வருடங்கள் பழமையானது அன்று. ஆதாமும் முதல் மனிதன் அல்ல. கிருதா, திரேதா, யுகங்களை கடந்து வந்த நாம் இப்பொழுது கலி-யுகத்தின் முடிவிலும், சத்தியு-யுகத்தின் ஆரம்பத்திலும் இருக்கின்றோம். அதர்மம் நிறைந்த இந்தக் காலத்தில், தர்மத்தை ஸ்தாபிக்க எப்போது பகவான் கல்கி-மகா-அவதாரம் எடுப்பார் என்று ஏங்கிக் கொண்டிருந்த நமக்கு ஒரு நற்செய்தி! எல்லா மத புனித வேதங்களின் தீர்க்கதரிசனங்களை நறைவேற்றுபவராக, ஶ்ரீமந் நாராயணர் தமது என்றும் அழியாத சொந்த வடிவத்தில், ஶ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற மகிமையான திருநாமத்தில், கல்கி-மகா-அவதாரமாக தென் இந்தியாவலி, (தாமிரபரணி நதி பாயும் பிரதேசத்தில்) வந்து விட்டார்.

2. நாம் ஆதியில் இருந்த உயர் நிலையும், பிறகு அடைந்த வீழ்ச்சியும்:

பரம புருஷர் நம்மை ஆதியில் படைத்த போது, அதிக சக்தி வாய்ந்த தேகங்களோடு படைத்தார். நினைத்த இடத்திற்கு நொடியில் செல்லும் ஆற்றல், மற்றும் மொழிகளின்றி, உணர்வு பரிமாற்றம் மூலம் சிந்தனைகளை அற்ந்து, இதயத்தோடு இதயம் பேசுவது. பூமிக்கு இறங்கி வந்து மனிதரோடு உண்ணுதல், பேசுதல் மற்றும் நினைத்தவுடன் மறைதல் போன்ற சித்திகளைப் பெற்றிருந்த ஶ்ரீமந் நாராயணர், தமது கோடி சூரிய பிரகாச விஸ்வ-ரூபத்தை மறைத்து மனித உருவம் தாங்கியவராய், நம்மை பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிறகு நமது தேகத்தின் சித்திகளினால் செருக்கடைந்து: இந்த பரமபுருஷரை நாம் ஏன் பணிய வேண்டும்? இவரை ஏன் வணங்க வேண்டும்? ஏன் கீழ்ப்படிய வேண்டும்? நாம் அனைவரும் ராஜாக்கள், என்று எண்ணினோம். அவரை நிரந்தரமாக ஒழித்துவிட்டால் தான் முழு சுதந்திரம் கிடைக்கும் என்று நினைத்தோம். நாம் அனைவரும் சேர்ந்து அவரைக் கொன்றுவிட எத்தனித்தோம். அக்கொடிய காரியத்தை செய்யவும் துணிந்தோம். (இது தான் நாம் அன்று செய்த ஜென்ம பாவம். அதாவது, பரம புருஷருக்கு கீழ்ப்படியாமை என்னும் பாவம். இந்தக் கொடிய பாவத்தினால் தான் நாம் ஜென்மம் எடுக்க நேரிட்டது.) எல்லா சக்திகளையும் உடைய பரம-புருஷர், நம் கொடிய எண்ணங்களை அறிந்திருந்தும். தம் அதி உன்னத சாகாமை சித்தியை, நமக்கு காட்ட, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். தம்மைக் கொல்ல அனுமதித்தார்.

'ஆதியில் பிரம்மா, வேள்வியையும் மனிதர்களையும் ஒரே காலத்தில் சிருஷ்டி செய்து: இந்த வேள்வியினால் நீங்கள் வளம் பெறுவீர்கள். இந்த வேள்வி நீங்கள் கோருவதையெல்லாம் வழங்கும் காமதேனுவாக இருக்கட்டும்.' - ஶ்ரீமத் பகவத் கீதை 3:10

'அந்த ஆதி புருஷனை ஹவிஸாக தேவர்கள் எந்த யக்ஞத்தை செய்தார்களோ, அதற்கு அந்த சரீரத்தின் கொழுப்பே நெய்யாகவும், அவருடைய எலும்புகள் ஸமித்து கட்டாகவும், அவருடைய முழு சரீரமே ஹவிஸ் ஆகவும் ஆயிற்று. - ரிக் வேதம்

நாம் அனைவரும் இந்த பரம பலியில் பங்கு கொண்டோம். அதிக கோபத்தோடு பரம-புருஷரைத் தாக்கி, அவர் ஓழிந்துவிட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், அவரை மூர்க்கத்தனமாக அடித்தோம். அவர் பரிசுத்த திருமேனியிலிருந்து இரத்தம் வடிய புல் தரையில் கிடத்தினோம். (ரிக் வேதம், புருஷ சுக்தம் வாசிக்கவும். யஜுர் வேதத்திலும் இதைப்பற்றி உண்டு.) அவரைக் கொன்றுவிட்டதாக எண்ணி, குழி தோண்டி புதைத்தே விட்டோம். ஆனால், பரம-புருஷர் சாக முடியுமா? அவர் தேஜோமயமாக எழுந்து நின்று நமக்கு காட்சி கொடுத்தார். நாம் அதிக ஆச்சரியமடைந்தோம்! பிறகு பயந்து நின்றோம். தானே சாஷ்வத புருஷர், தன்னை யாரும் அழிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்தினார். அவர் சக்திகளை இப்பொழுது புரிந்துகொண்ட நாம் அவரை முற்றிலுமாக சரணடைந்தோம். மன்னிப்பு கோரினோம். அவர் நம்மை மன்னித்து இவ்வாறு அருளினார். காலக்கிரமத்தில், இந்த பூமியில் நாம் அனைவரும் பிறப்பு, பிணி, மூப்பு, மரணம் கொண்ட தேகங்களோடு பிறவி எடுக்க வேண்டும் என்பதையும், பிறவிக் காலத்தில் பரம-புருஷரை முற்றும் சரண் அடைந்தவர்களாக வாழ்ந்து, மீண்டும் பரம-பதம் திரும்புமாறு கூறினார். தான் ஒவ்வொரு யுகத்திலும் பல அவதாரங்கள் எடுத்த பிறகு, கடைசியாக கலி-யுகத்தில், கல்கி-அவதாரமாக வருவதாக கூறினார். நாம் அதிக சந்தோஷமடைந்தோம். காலக் கிரமத்தில் மனித பிறவிகளாக பிறந்துள்ளோம். நம்மை தேடி இறைவன் பல அவதாரங்கள் எடுத்தார்.

3. அவதாரங்களுக்கும், ஶ்ரீமந் நாராயணருக்கும் உள்ள வேறுபாடு:

அவதாரங்கள் ஶ்ரீமந் நாராயணரின் அம்சங்களே! காலமும், பணியும் முடிந்த பிறகு, அவதாரங்கள் மரிப்பார்கள். ஆனால் ஶ்ரீமந் நாராயணரோ என்றும் அழிவற்றவர்! கல்கி-மகா-அவதாரம் ஒரு சாதாரண அவதாரமன்று. அவர் ஶ்ரீமந் நாராயணரே! இவரை வணங்கினால், கொடிய மரணத்தையே வென்றுவிடலாம்! அழிவில்லாத நமது ஆதி நிலையை அடையலாம்.

4. ஶ்ரீமந் நாராயணரின் பிறப்பும், தெய்வீக திருப்பணிகளும்:

ஶ்ரீ லஹரி கிருஷ்ணா என்ற புனிதமான திரு நாமத்தில், வேத வியாசர் கூறிய வண்ணம், கல்கியானவர், தாமிரபரணி ஆறு பாயும் திருநெல்வேலியில் தோன்றி, பல தெய்வீக அதிசயங்களை நிகழ்த்தி, தாமே ஶ்ரீமந் நாராயணர் என்பதை நிரூபித்துவிட்டார். இதுவரை இந்த உலகத்தில் யாரும் போதிக்காத சாகாமை யோகத்தையும் இவர் போதித்து, எல்லாம் அறிந்த ஆதிமூலம் தானே என்பதை உலகிற்கு உணர்த்தினார். இவர் உபதேசத்தின்படி நடந்தால் மரணம் இல்லாத பெருவாழ்வை மிக எளிதாக அடையலாம். விஷ்ணு சக்கரம் கொண்ட தமது தெய்வீகக் கொடியை ஏற்றி, சத்திய-யுகத்தை ஸ்தாபித்துவிட்டார். வெகு சீக்கிரத்தில் கொடியவர்களை சம்ஹாரம் செய்து, கலி-புருஷனை அழித்து, தமது தர்ம-யுகத்தை உலகம் முழுவதும் நிறுவுவார்.

5. கல்கி-மகா-அவதாரம் தமது சாகாமை சித்தியை பூமியில் மறுபடியும் காண்பித்து தாமே ஶ்ரீமந் நாராயணர் என்று நிரூபித்தல்:

தமது விஸ்வ ரூபத்தை 18 ஜுன், 1969-ல்காண்பித்த பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா, தாமே சாவற்ற நாராயணர் என்பதையும், அழிவற்ற தேகம் உடையவர் என்பதையும் உலகிற்கு விரும்பினார்.

பிப்ரவரி 24, 1989 அன்று, பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணா, தன்னுடைய உடலின் அனைத்து இயக்கத்தையும் (41 மணி நேரம்) நிறுத்தி, மஹா யோக சித்தர்களுக்கும் நாயகனான அவர் தன் பரிசுத்த திருமேனியை, பூமிக்குள் புதைக்கும்படி, தம் சீடர்களையும், பக்தர்களையும் அனுமதித்தார். இதே நிகழ்ச்சியை ஆதியில் நிகழ்த்திய பக்தர்களும், சீடர்களும், சிருஷ்டியின் ஆதியில் அவர் காட்டிய மஹா சக்தியை நினைத்து, அதை மறுபடியும் உலகிற்கு பறைசாற்றும் இந்த பரம யோகத்தில், அதிக சந்தோஷமாக பங்கெடுத்தனர். பூமியினுள் சென்ற இலைவன், யோகத்தின் தலைவன், தேஜோமயமாக வெளியில் தோன்றி, உலகின் பல பாகங்களிலும் உள்ள தன் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் தன்னை வெளிப்படுத்தினார். இன்றும் தன்னை வெளிப்படுத்துகிறார்.

6. பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் தரிசனம் பெறுவதெப்படி?

ஶ்ரீமந் நாராயணர், பகவாம் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவை நீங்கள் காண விரும்பினால், பிரேம பக்தி ஒன்றே உண்மையான உள்ளன்போடு தரிசனமும், அருளும் உங்கள் வீட்டிலேயே கிடைக்கும்.

7. பகவான் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவை சரண் அடைவதால் ஏற்படும் ஆசீர்வாதங்கள்:

(அ) ஜென்ம பாவம், கரும பாவம் நீங்கி மஹா சாந்தியை நொடியில் பெறலாம்.

(ஆ) வறுமை, துன்பம், பயங்கர வியாதிகள், பேய் பிசாசுகளின் கட்டுகளில் இருந்து விடுதலை அடையலாம்.

(இ) முதுமை, மரணம் இவைகளை மேற்கொண்டு, மறுரூபமாகி, சாகாமை பெற்று (சிரஞ்சீவியாக) பரமபதமான ஶ்ரீ வைகுண்டம் பறந்து செல்லலாம்.

8. வெற்றி தரும் அன்புக் கொடி:

உண்மையான சனாதன தர்மத்தை ஸ்தாபிக்க, பாரத புண்ணிய பூமியில் வந்துள்ள, பரம புருஷராகிய ஶ்ரீமந் நாராயணர், ஶ்ரீலஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அன்புக் கொடி எங்கெங்கு பறக்கிறதோ, அங்கு சுபிட்சமும், மிகுந்த வெற்றியும், தேவ நீதியும், மகிமையும் என்றும் நிலைத்திருக்கும்.



இந்த பிரதியானது பகவான் இருபது ஆண்டு காலமாக அளித்த உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது.

எல்லாப் புகழும் பகவான் ஶ்ரீ 'லஹரி' கிருஷ்ணா ஒருவருக்கே உரித்தாகுக!

ஓம் நமோ பகவதே ஶ்ரீ லஹரி கிருஷ்ணாய !!